தமிழ்நாடு கல்வி நிதி சர்ச்சை: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் பனிப்போர்

தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பாஜக அரசுக்கும் இடையே கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பெரும் பனிப்போர் நடந்து வருகிறது. அண்மையில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2152 கோடி கல்வி நிதியை பிற மாநிலங்களுக்கு மாற்றியதன் மூலம், தங்களது உரிமைக்காகப் போராடும் மாணவர்களை, ஒன்றிய பாஜக அரசு தண்டிப்பதாகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, PM SHRI திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு கையெழுத்திடாததே நிதி ஒதுக்கீடு தள்ளிப்போகக் காரணம் என ஒன்றிய பாஜக அரசு விளக்கமளித்தது.

கல்வி நிதி ஒதுக்கீடு குறித்த குற்றச்சாட்டுகளும் விளக்கங்களும்

Political cartoon of SSA fund issue between Union govt and Govt of Tamilnadu

சமக்ர சிக்‌ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan) என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதியைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தக் கணக்கின்படி, பள்ளிகளின் மேம்பாடு, ஆசிரியர்களுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு, மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை போன்றவற்றுக்கு நிதி செலவிடப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2152 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தொகை பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. தேசிய கல்விக் கொள்கையின் (National Education Policy – NEP) ஒரு பகுதியான PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு இணைய மறுத்ததால், இந்த நிதி ஒதுக்கீடு பழிவாங்கும் நடவடிக்கையாக மாற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இருப்பினும், பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு, கேரளா, மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படாமல் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேசமயம், உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.6.25 லட்சம் கோடி, அசாமிற்கு ரூ.2.02 லட்சம் கோடி, குஜராத்திற்கு ரூ.1.25 லட்சம் கோடி, ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ.1.25 லட்சம் கோடி எனப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்மொழிக் கொள்கை 

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் மக்களவையில் மும்மொழிக் கொள்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்திருக்கிறார். அதில், மாணவர்களின் விருப்பம் மற்றும் பன்மொழித் தன்மையை ஊக்குவிக்கும் விதமாக மும்மொழிக் கொள்கை நாடாளுமன்றத் தீர்மானத்தால் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், தேசிய கல்விக் கொள்கை-2020-ல் எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

to read more on Trichy Model School Click here

தேசிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை-2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023 ஆகியவற்றை உருவாக்குவதற்கு முன்பு, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டதாகவும், கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால், தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் மற்றும் பரிந்துரைகளின்படி, மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் பதிலில் தெரிவித்திருக்கிறார். 

இருப்பினும், இந்த விளக்கங்கள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டிற்கு மீண்டும் வஞ்சகம் இழைக்கும் விதத்தில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன. கல்வி நிதி விவகாரம் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு இடையே ஒரு முக்கிய விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top