
தொகுதி மறுசீரமைப்பு ( Fair Delimitation )குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் மார்ச் 22ல் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று கேரளா, கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தொகுதி மறுசீரமைப்பு

நாடு முழுவதும் 2026ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்தப் பணிகள் நடைபெறும் என்பதால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
கூட்டு நடவடிக்கைக்குழு அமைப்பு

ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்த திட்டத்துக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடந்த 5-ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் 58 கட்சிகள் கலந்து கொண்ட அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டினார். அந்தக் கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Also Read : Tamil Nadu’s Trailblazing Reforms in Education Under Anbil Mahesh Poyyamozhi
ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு
அதன்படி, தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்கு வங்காளம், பஞ்சாப், ஆகிய மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அக்கடிதத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனவும், அதில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம்


அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan), பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் (Bhagwant Mann), தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி (Revanth Reddy), கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் (D. K. Shivakumar), ஒடிசா மாநில முன்னாள் அமைச்சரும் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான சஞ்சய்குமார் தாஸ் பர்மா (Sanjay Kumar Das Burma), பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கே.டி. ராமாராவ் (K. T. Rama Rao), சிரோண்மணி அகாலி தளம் கட்சியின் செயல் தலைவர் பல்விந்தர் சிங், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் உதய் சீனிவாஸ் எம்.பி., இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரளா மாநில பொதுச் செயலாளர் PMA ஸலாம், கேரள காங்கிரஸ் தலைவர் ஜோஸ் கே.மணி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையை (Fair Delimitation) ஏற்றுக்கொண்டால், நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும், மாநிலத்துக்கான நிதியைப் பெறுவதற்கே போராட வேண்டியிருக்கும், மக்கள் விரோத சட்டங்கள் நம்மீது திணிக்கப்படும், நமது பண்பாடும் அடையாளங்களும் சிதைக்கப்படும், உழைக்கும் மக்களும் உழவர்களும் கைவிடப்படுவார்கள், கல்வி, வேலைவாய்ப்புகளில் மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடும், பெண்கள் அதிகாரம் பெறுவதில் பின்னடைவு ஏற்படும், சமூகநீதி பறிக்கப்பட்டு, இடஒதுக்கீடு இல்லாமல் போகும், பட்டியலின, பழங்குடி மக்கள் மேலும் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள், சொந்த நாட்டிலேயே அரசியல் அதிகாரமற்ற குடிமக்களாக மாற்றப்படுவோம், நாம் வாழவேண்டும் என்பது குறித்து நம்மைப் பற்றி எதுவுமே அறியாதவர்கள் முடிவெடுப்பார்கள் என்றார்.
மேலும், இந்தக் கூட்டம் மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல, நியாமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தீர்மானம் நிறைவேற்றம்

தொடர்ந்து, இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கருத்துகளைத் தெரிவித்தனர். இறுதியாக, தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதைப் பிரதமர் மோடியே நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும். வெளிப்படையான முறையில் தொகுதி மறுசீரமைப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
To know about JAC meeting highlights: https://www.thehindu.com/news/national/delimitation-joint-action-committee-meeting-chennai-tamil-nadu-stalin-march-22-2025/article69360670.ece

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr