திருச்சியில் கழக மாநில மாநாட்டுப் பணிகளை அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்தனர்
திருச்சி 01, பிப்ரவரி 2025 : கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சியில் நடைபெறவுள்ள கழக மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாட்டு பணிகளை, கழக முதன்மைச் செயலாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களின் தலைமையில் இன்று அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில், மாநாட்டை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்த அனைத்து பணிகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. கழகத்தின் கொள்கைகள், சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும் என்பதே அனைவரின் இலக்காக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கூறினார்.
மேலும், “மாநாட்டின் வெற்றி கழகத்தின் வெற்றியாக அமைய வேண்டும்; அதற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம்” என அவர் உறுதியளித்தார். கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மாநாட்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் சல்மா, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர்முன்னிலை வகிக்க உள்ளார்கள்.
திருச்சியில் மாநில அளவிலான யோகா போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 01, பிப்ரவரி 2026 : திருச்சி மாவட்ட யோகா அமைப்பின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட மாநில அளவிலான யோகா போட்டியினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து, இதில் பங்கேற்ற யோகா வீரர், வீராங்கனைகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஆர்வத்தையும் திறமையையும் பாராட்டிய அமைச்சர், யோகா வளர்ச்சிக்காக இதுபோன்ற போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் என்றும், அரசின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மனிதநேய மக்கள் கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி தொடக்கம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 01, பிப்ரவரி 2026 : மனிதநேய மக்கள் கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, திருச்சி கிழக்கு மாவட்டம் மற்றும் காமராஜ் நகர் விளையாட்டு அணிகள் இணைந்து ஒருங்கிணைத்த 2ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை, SIT கல்லூரி மைதானத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து, போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் கட்டுப்பாடு, குழுப்பணி மற்றும் தலைமைத் திறன் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார் . இத்தகைய விளையாட்டு போட்டிகள் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதோடு, இளம் தலைமுறையினரை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார். போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர், வீரர்களின் திறமைகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
திருவெறும்பூரில் Bothidharmar கோப்பை கராத்தே போட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்
திருவெறும்பூர் 01, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதியில் Bothidharmar Martial Arts Academy சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட Bothidharmar கோப்பைக்கான கராத்தே போட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார். போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, பங்கேற்ற அனைத்து குழந்தைகளையும் பாராட்டினார்.

நிகழ்வில் பேசிய அமைச்சர், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகள் குழந்தைகளின் உடல் வலிமை, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் பயிற்சிகளாக உள்ளன எனக் குறிப்பிட்டார். இளம் வயதிலேயே விளையாட்டு மற்றும் தற்காப்புக் கலைகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருவெறும்பூர் தொகுதி நவல்பட்டு அண்ணா நகர் மைதானத்தில் சீரணி அரங்கம் திறப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருவெறும்பூர் 01, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு அண்ணா நகர் மைதானத்தில், ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.9 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சீரணி அரங்கத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் ஊராட்சி பகுதிகளில் விளையாட்டு மற்றும் பொதுப் பயன்பாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவது இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்கும் சமூக ஒற்றுமைக்கும் உதவும் எனக் குறிப்பிட்டார். இத்தகைய அடிப்படை வசதிகள் மக்களின் தினசரி பயன்பாட்டை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய சீரணி அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டதையடுத்து, உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
திருவெறும்பூர் தொகுதி பாலாஜி நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு

திருவெறும்பூர் 01, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதி பாலாஜி நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்றார். 21வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்ற இந்த விழாவில், தங்களின் திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு அவர் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். சமூக ஒற்றுமையும் பாரம்பரிய பண்பாடும் இத்தகைய விழாக்களால் மேலும் வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டார்.
திருவெறும்பூரில் நடைபெற்ற விளையாட்டு தெரு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு
திருவெறும்பூர் 01, பிப்ரவரி 2026 : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து திருவெறும்பூரில் நடத்திய விளையாட்டு தெரு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், அன்போடு வரவேற்ற குழந்தைகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இத்தகைய நிகழ்வுகள் குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தையும் சமூக ஒற்றுமையையும் வளர்க்கும் என தெரிவிக்கப்பட்டது.
முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு
திருச்சி 02, பிப்ரவரி 2026 : திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்களுடன் இணைந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, முன்னாள் மாணவர்களையும் நன்கொடையாளர்களையும் கௌரவித்தார். நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாணவர்களை மையமாகக் கொண்டு செயல்படும் இந்தப் பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்கால முன்னேற்றத்திற்கும் அரசு தொடர்ந்து துணை நிற்கும் என உறுதியளித்தார்.

விழாவில் தியாகராஜன் எம்.எல்.ஏ., முசிறி சப் கலெக்டர் திருமதி சுவாங்கி குந்தியா, முசிறி நகர்மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், முன்னாள் மாணவரான வழக்கறிஞர் கலைச்செல்வன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
“ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” நூல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு அமைச்சர் பெருமக்கள் பங்கேற்ப்பு
திருச்சி 02, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் திசைதோறும் திராவிடம் திட்டத்தின் கீழ், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. சுப. வீரபாண்டியன் அவர்களின் “ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” என்ற நூல், “Sociopolitical Movements of a Century in Tamil Nadu” எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலை பேராசிரியர் முனைவர் திருமிகு. குர்ஷித் பேகம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூல் புனித வளனார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் வெளியிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், சமத்துவமின்மையை எதிர்த்து உரிமைகளுக்காக போராட வேண்டுமென்றால், நமது போராட்டங்களின் வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம் என்றும், அந்த வகையில் இந்த நூல் ஒரு சிறந்த ஆவணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், நூலை வாசிக்கும் போது “பெரியார் முன்பை விடவும் இன்று அதிகம் தேவைப்படுகிறார்” என்ற உணர்வு மேலோங்கும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் தன்மான அடையாளத்திற்கு அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் Dravidian Model ஆட்சிக்கான உறுதியேற்பு
03, பிப்ரவரி 2026 : தமிழ்நாட்டின் தனித்த தன்மான அடையாளத்திற்கு அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் திருச்சி தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளுடன் ஊர்வலமாகச் சென்று திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாவட்டக் கழகச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

மொழித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை, ஒன்றிய அரசின் ஆதிக்கம் போன்ற இன்றைய சிக்கல்களை அன்றே உணர்ந்து, அதற்கான கொள்கை வழிகாட்டுதல்களை வகுத்துச் சென்ற பெருந்தகையாக பேரறிஞர் அண்ணா நினைவுகூரப்பட்டார்.
அவர் அமைத்த அடித்தளத்தின் பேரில்தான் தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து போராடி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார். மேலும், கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் Dravidian Model ஆட்சி மீண்டும் அமைய, பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் உறுதியேற்றார்.
திண்டுக்கல்லில் மாபெரும் அறிவியல் கண்காட்சி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வை
திண்டுக்கல் 03, பிப்ரவரி 2026 : திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் S.S. நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை இணைந்து Science, Technology & Startup Innovation Fest என்ற பெயரில் மாபெரும் அறிவியல் கண்காட்சியை ஒருங்கிணைத்துள்ளனர். திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இந்த அறிவியல் கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவச் செல்வங்களும், பொது மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு, மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் மாதிரிகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில், “அறிவியல் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். மாணவச் செல்வங்களும் இளைஞர்களும் எளிய மக்களுக்கு பயன்படும் வகையிலான அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களை ஊக்குவித்து சிறப்பித்தார். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை சிந்தனைகளை வளர்க்கும் வகையில் அமைந்த இந்த கண்காட்சி மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
