தமிழ்நாடு பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” ஏழாவது மண்டல மாநாடு, கடலூர் மாவட்டம், திருப்பபையரில் கடந்த 22.2.2025 அன்று சிறப்புற நடைபெற்றது. ஏறத்தாழ 1.32 லட்சம் பேர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வரவேற்புரையாற்றி, மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.

“மாநாட்டுக்கு நடந்து வந்த கால்களுக்கு என் முதல் நன்றி! சில நூறு கால்கள் அல்ல, லட்சக்கணக்கான கால்கள், சரியாக சொல்ல வேண்டும் என்றால் இரண்டரை லட்சம் கால்கள் இந்த மாநாட்டுப் பந்தலுக்குள் வந்து சேர்ந்திருக்கின்றன. இதயம் நிறைந்த அன்புடனும், இது எங்கள் வீட்டு விழா எனும் பெருமிதத்துடனும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்த ஒரு திருவிழாதான் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு.” எனப் பேசத் தொடங்கிய போதே மாநாட்டுப் பந்தலில் உற்சாக வெள்ளம்!

முந்தைய மாநாடுகள் :
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் ஓரிடத்தில் சங்கமிக்க வைப்பது பெரிய சவால். ஆனாலும், இதுவரை ஆறு மண்டல மாநாடுகள் மதுரை, திருச்சி, தர்மபுரி, கோவை, காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருக்கிறது. ஏழாவது மண்டல மாநாடு விருத்தாச்சலத்தில் உள்ள திருப்பையூரில் நடைபெற்ற இம்மாநாட்டில் கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் இருந்து அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
அரசுப்பள்ளிகளுக்கு சீர் கொண்டு வந்த முதல்வர் :

மாநாட்டுத் திடலின் வாயிலில் இருந்து சுமார் 200 அடி நீளத்துக்கு பெற்றோர்களின் அன்பு மழையிலும் அவர்களின் செல்ஃபி மழையிலும் நனைந்தபடி முதல்வர் வருகை தந்தார். பள்ளிகளுக்காகவும் மாணவர்களுக்காகவும் முதல்வரும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சீர் சுமந்து வந்தார்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு பாடல் :

அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, அவை பெறுமையின் அடையாளம் என்பதை உணர்த்தும் காட்சிப்படுத்தும் ஒரு அழகிய பாடல் விழாமேடையில் ஒளிபரப்பட்டது. முதல்வரும் அமைச்சர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இப்பாடலை பார்த்து மகிழ்ந்தனர். அதன்பிறகு, விழாமேடைக்கு முதல்வர் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், தமிழர்களின் ஒற்றுமையைக் காட்சிப்படுத்தும் வகையில் இன மத வேறுபாடுகளற்ற எல்லாப் பிரிவையும் சேர்ந்த மாணவர்களும் முதல்வருடன் மேடையேறினர். நம் பள்ளிக்கல்வியின் ஒவ்வொரு வகுப்பையும் குறிக்கும் வகையில் விழாமேடைக்கு மொத்தம் 12 படிகள். முதல்வரை ஒரு குழந்தையாகவே மாற்றிய இரண்டு சுட்டிக்குழந்தைகளும் அவர்கள் முதல்வருடன் பேசிய கொஞ்சல் மொழிகளும் விழாவின் ஒரு முக்கியமான ஹைலைட்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வேண்டுகோள்:
திருக்குறளோடு தொடங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உரை, உணர்ச்சிமயமான ஒரு புள்ளியைத் தொட்டது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என எல்லாத்தரப்பில் இருந்தும் ஏதோ ஒரு வகையில் நம்மை விட்டு பிரிந்த அத்தனை உயிர்களையும் தன்னுடைய மனதில் நிறுத்தி ஒரு வேண்டுகோளை தமிழக மக்களின் முன் வைத்தார்.

மார்ச் 1-ம் தேதியில் இருந்து அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை தொடங்குகிறது, பள்ளிக்கூடத்தில் சேரக்கூடிய வயது வந்த மாணவச்செல்வங்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

மக்களுக்கெல்லாம் மாண்புமிகு முதலமைச்சராக, உடன்பிறப்புகளுக்கெல்லாம் தலைவராக கொள்கை எதிரி என்று சொன்னால் The Most Dangerous Person ஆக, ஏன் உங்களுக்கெல்லாம் குடும்பத்தில் ஒருவராக வருகை தந்திருக்கின்ற, குறிப்பாக தந்தை ஸ்தானத்தில் இருந்து பல்வேறு திட்டங்களை மாணவ செல்வங்களின் எதிர்கால திட்டத்திற்காக கொண்டுவந்து கொண்டிருக்கின்ற, மாணவ செல்வங்கள் எல்லாம் இங்கு `அப்பா’, `அப்பா’ என்று அழைக்ககூடிய நம்முடைய மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களைப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் என்கிற முறையில் வருக, வருக, வருக என்று வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார். மாநாட்டுக்கு வருகை தந்த மற்ற அமைச்சர்களையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.
விளம்பரத்துக்காக அல்ல :
பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களையும் சாதனைகளையும் பொதுமக்களுக்குக் காட்டுவது விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல, இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வுகளுக்கு முதலமைச்சர் என்ன செய்கிறார்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எங்கே போனார்? என்றெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள் அதையும் நாங்கள் சரிசெய்ய வேண்டியது எங்கள் கடமை. அதையும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் பல சாதனை திட்டங்களையும் பல சாதனை மாணவர்களையும் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் இல்லையா, அது எப்படி என்று உங்களுக்குக் காட்ட வேண்டும் என ஆசைப்பட்டோம்.அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்பதை பல்வேறு திட்டங்களின் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம் என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மூலமாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, எங்கள் கல்வி எங்கள் உரிமை என்பதை நாம் பறைசாற்றுவோம். Our Education Our Right என்றார். அடுத்ததாக இரண்டு செயலிகள் இம்மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஒருமைக்கண் செயலி :

ஒருமைக்கண் செயலி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 77 பொருண்மைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்ததற்கான தகவல்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்ட மின்புத்தகம் (E-Book). தமிழ்நாட்டின் அரசுப்பள்ளிகளின் ஆய்வுகளுக்கான ஒரு விரைவான அணுகுமுறைக்கு இந்த ஒருமைக்கண் உதவி புரியும்.
‘அப்பா’ App:

APPA – Ananithu Palli Parents Teachers Association. செயலி, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையேயான தொடர்பு இடைவெளியைக் குறைப்பதற்கும், அதன் மூலம் ஒட்டுமொத்த கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதுமையான செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் -ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தினமும் தேவைப்படும் தகவல்கள், அரசு அறிவிப்புகள், உத்தரவுகள் என அனைத்தையும் வழங்கும் ஒரு செயலியாக இது இருக்கும் என பெருமிதம் பொங்க கூறினார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
APPA App link to download
”இதுதான் தமிழ்நாடு!” முதல்வரின் நெகிழ்ச்சி :
இந்த இரண்டு செயலிகளையும் வெளியிட்ட முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள், “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…” என்ற பாடலைப் பாடி தனது உரையைத் தொடங்கினார். “இங்க ஆசிரியர்கள் இருக்கீங்க… ஸ்கூல் பசங்க மாதிரி காரணம் சொல்றேன்னு தயவு செய்து நினைச்சுடாதீங்க…” என மாநாட்டுக்கு வரத் தாமதமான காரணத்தை விளக்கினார்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவர்களை வார்ப்பித்தும் வளர்ப்பித்தும் வருகிற பெற்றோரையும் ஆசிரியர்களையும் வணங்குகிறேன், பாராட்டுகிறேன். இத்தனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூடி இருக்கும் இந்தக் காட்சி இதுவரை தமிழ்நாடு பார்க்காத காட்சி, ஒட்டுமொத்த நாடும் பார்த்து அதிசயிக்கும் காட்சி இது. இதுதான் தமிழ்நாடு.
இது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம்:

திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும் பள்ளிகளை உருவாக்கினோம், மாணவர்களை பள்ளிகளில் சேர்த்தோம், படிக்க வைத்தோம், மதிப்பெண்கள் வாங்க வைத்தோம், வெளியே அனுப்பினோம். இதோட பள்ளிக்கல்வித் துறையின் கடமை முடிஞ்சிட்டதா யாரும் நினைக்கவேண்டியது இல்லை. ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டின் சொத்து. இந்த நினைப்போடுதான் நாம் செயல்படுகிறோம். இந்த அடிப்படையில்தான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செயல்பட்டு வருகிறார். அவர் பொறுப்பு வகிக்கக்கூடிய இந்த காலம்தான் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையோட பொற்காலம் அப்படின்னு போற்றத்தக்க வகையில் அவர் செயல்பட்டு வருகிறார்.

“இல்லம் தேடி கல்வி” திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதுடன், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதமும் கணிசமாக அதிகரித்துள்ளது. 80,000 ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் வழங்கப்பட்டதோடு, 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளும், 8,209 ஹைடெக் ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கலைத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், ஆசிரியர்களும் வெளிநாட்டு கல்விப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவற்றுடன், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள பள்ளிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.
மதுரை, திருச்சி, தர்மபுரி, கோவை, காஞ்சிபுரம், நெல்லை ஆகிய ஆறு மண்டலங்களில் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்த ஆறு நிகழ்ச்சிகளில் சுமார் 1,95,000 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஏழாவது மாநாடு விருத்தாசலத்தில் நடைபெறுகிறது. இதில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த, பல்வேறு பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகங்களில் இருந்து சுமார் 1,00,000 உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். தங்களது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு வருகை தந்துள்ள அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியை மறுக்கலாமா?
தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை மறுப்பதோடு, சமூக நீதிக்கு எதிரானதாகவும், தமிழ் மொழி, தமிழ் மக்கள், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்தானதாகவும் உள்ளது. எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்றாலும், மொழித் திணிப்பை உறுதியாக எதிர்க்கிறோம், ஏனெனில் இந்தி திணிப்பு மாணவர்களை பள்ளியிலிருந்து விலகச் செய்யும். இக்கொள்கையால் சமூக நீதி பலவீனமாக்கப்படுவதோடு, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான உதவித்தொகை மறுக்கப்படுகிறது. மேலும், 3, 5, 8 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு முறையும், 9-12 வகுப்புகளில் செமஸ்டர் முறையும், அகில இந்திய அளவிலான தேர்வு முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. NEET போன்ற நுழைவுத் தேர்வுகள் அனைத்துக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதனுடன் 10 ஆம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை தொடர விரும்பாத மாணவர்கள் வெளியேறலாம் என்ற கொள்கை, மறைமுகமாக கல்வியை மறுப்பதற்கு சமமாக உள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் ‘குலக்கல்வி திட்டம்’ என்ற பெயரில் தொழில்கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இது மனுநீதியின் குலத்தொழில் என்ற அநீதியை மீண்டும் கொண்டுவரும் முயற்சியாகும். இதனால்தான் 2,000 கோடி ரூபாய் நிதி கிடைத்தாலும் கூட, இந்தக் கொள்கையை ஏற்க முடியாது என உறுதியாக மறுக்கிறோம், ஏனெனில் இது தமிழ் சமுதாயத்தை 2,000 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச் செல்லும். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, இந்தி மொழியும் எதிரியல்ல – யார் விரும்புகிறார்களோ அவர்கள் ஹிந்தி பிரச்சார சபா, கேந்திரிய வித்யாலயா அல்லது வேறு வழிகளில் கற்றுக்கொள்ளலாம், அதை தமிழ்நாடு தடுக்கவில்லை, தடுக்கவும் போவதில்லை. ஆனால் இந்தியை திணிக்க முயன்றால், தமிழர் என்றொரு இனம் உண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும். இருமொழிக் கொள்கையிலேயே தமிழ்நாட்டு மாணவர்களின் திறமை உலகெங்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொழிக்கொள்கை ஏன் இந்தியாவுக்கு அவசியம்!

ஒன்றிய கல்விய அமைச்சர் கேட்கிறார். எல்ல மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையையும் தேசிய கல்விக்கொள்கையையும் ஏற்றுக்கொண்ட நிலையில் ஏன் தமிழ்நாடு மட்டும் ஏத்துக்கல?
ஏன் தெரியுமா?
இது தமிழ்நாடு. எங்க உயிரைவிட மேலாக தமிழை மதிக்கிறவங்க நாங்க. திராவிட இயக்கம் 85 ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் 52 மொழிகள் அழிந்துள்ளன, இந்தி ஆதிக்கத்தால் மட்டும் 25 மொழிகள் அழிந்துள்ளன. தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையால்தான் இன்று பிற மாநில மொழிகளும் காப்பாற்றப்படுகின்றன.

சமஸ்கிருத மொழிக்கு 1488 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, 8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு வெறும் 74 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்.

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் மாணவர்களின் மன வலிமை, உடல் வலிமை, அறிவு மேம்பாடு ஆகியவற்றை வளர்க்க வேண்டும். பெற்றோர்கள் முதல் ஆசிரியர், ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். திராவிட மாடல் அரசு தொடர்ந்து இருக்கும்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவர் முத்துக்குமார் அவர்கள் நன்றியுரையுடன் இம்மாநாடு நிறைவுபெற்றது.










Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
Pingback: ஹாட்ரிக் ஹைலைட்! புகழ்ந்த முதல்வர்… நெகிழ்ந்த அமைச்சர்!